sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏர்வாடி சந்தனக்கூடு மே 9ல் துவக்கம்

/

ஏர்வாடி சந்தனக்கூடு மே 9ல் துவக்கம்

ஏர்வாடி சந்தனக்கூடு மே 9ல் துவக்கம்

ஏர்வாடி சந்தனக்கூடு மே 9ல் துவக்கம்


ADDED : ஏப் 27, 2024 01:25 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இதன், 850ம் ஆண்டு சந்தனக்கூடு துவக்க நிகழ்ச்சி மவுலீது ஓதுதல் மே 9ல் துவங்குகிறது.

தினமும் ஷரீப் தர்கா மண்டபத்தில் ஏர்வாடி தர்கா ஹக்தார்களால் 23 நாட்கள் மவுலீது ஓதப்படும்.

மே 18ல் தர்கா வளாகம் முன்புறமுள்ள கொடி பீடம் அமைந்துள்ள இடத்தில் மாலை 5:00 மணிக்கு அடிமரம் ஊன்றப்படும்.

மே 19 மாலை பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ணக் கொடி யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தர்கா முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

மே 31 மாலை துவங்கி மறுநாள் அதிகாலை வரை மவுலீது ஓதப்பட்டு, பின்னர் புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியுடன் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பர்.

ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் மற்றும் உறுப்பினர்கள் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us