ADDED : ஜூன் 21, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து, 40 பேர் பலியானதை ஒட்டி, அதை தடுக்கத் தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அவர் வகித்து வந்த பொறுப்பை, மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண் கவனிப்பார் என அரசு அறிவித்துள்ளது.
அதேபோல, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.

