ADDED : ஜூலை 07, 2024 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்திய மருத்துவ சங்கம், தமிழக கிளை சார்பில், அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி அளிக்கும், 'ஆரூயிர்' - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் அப்துல்ஹசன், செயலர் கார்த்திக் பிரபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் கீழ், 42,000 டாக்டர்கள் வழியே, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.