sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஐ.டி., ஆராய்ச்சிக்கு முன்னாள் மாணவர் ரூ.41 கோடி நன்கொடை

/

ஐ.ஐ.டி., ஆராய்ச்சிக்கு முன்னாள் மாணவர் ரூ.41 கோடி நன்கொடை

ஐ.ஐ.டி., ஆராய்ச்சிக்கு முன்னாள் மாணவர் ரூ.41 கோடி நன்கொடை

ஐ.ஐ.டி., ஆராய்ச்சிக்கு முன்னாள் மாணவர் ரூ.41 கோடி நன்கொடை


ADDED : ஜூன் 19, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை ஐ.ஐ.டி., யில் மூளை ஆராய்ச்சிக்காக, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் பிரேம்வத்சா, 41 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்தில், 1971ம் ஆண்டு ரசாயன பொறியியல் பாடத்தில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் பிரேம்வத்சா.

இவருக்கு, 1999ல் சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. இவர், 'பேர்பேக்ஸ் பைனான்ஷியல் ஹோல்டிங்ஸ்' என்ற கனடா நாட்டு நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஐ.ஐ.டி.,யில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம், 2022 மார்ச் மாதம் துவக்கப்பட்டது. மனித மூளை தரவு, அறிவியல் வெளிப்பாடு, தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை வைத்து, மனித மூளையை செல்லுலார் மட்டங்களில் படம் பிடிக்க, ஒரு உலகளாவிய லட்சிய திட்டத்தை, இந்த மையம் செயல்படுத்தி வருகிறது.

இம்மையத்தில் நடந்து வரும் ஆராய்ச்சி பணிகளுக்காக, பிரேம்வத்சா 41 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். அவருக்கு ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us