sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம்

/

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம்

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம்

வாரிசு சான்றிதழ் விதிமுறைகளில் திருத்தம்


ADDED : மார் 29, 2024 09:34 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வாரிசு சான்றிதழ் பெறுவது தொடர்பான அரசாணையில், திருமணமாகாத நபரின் இரண்டாம் நிலை வாரிசுகள் தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்து வைத்துள்ள நபர்கள் இறந்தால், அவரது சொத்தை வாரிசுகள் பெற, வாரிசு சான்றிதழ் அவசியம். இதை, வருவாய்த் துறைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்.

ஆன்லைன் முறையில் வாரிசு சான்றிதழ் வழங்கும் போது, ஒரு நபரின் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என்பது குறித்த வரையறை தயாரிக்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய அரசாணையை, 2022ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டது.

இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என்பதற்கான வரையறையில், ஹிந்து வாரிசுரிமை சட்டத்தின் விதிமுறைகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாரிசு சான்றிதழில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், வாரிசு சான்றிதழ் தொடர்பான அரசாணையில், உரிய திருத்தங்கள் செய்து, புதிய ஆணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

திருத்தங்கள் என்ன?


வருவாய்த் துறை மேற்கொண்டுள்ள திருத்தம் விபரம்:
 கணவர் இறந்தால், அவரது மனைவி, குழந்தைகள், சட்டப்படி தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் வாரிசுகளாவர்
 மறுமணம் புரிந்த நபர் இறந்தால், அவரது இறந்த அல்லது விவாகரத்து பெற்ற மனைவியின் குழந்தைகள், தற்போதைய மனைவி, குழந்தைகள், தத்து எடுத்த குழந்தைகள், பெற்றோர் ஆகியோர் வாரிசுகளாக வருவர்
 திருமணமாகாத நபர் இறந்தால், அவரது பெற்றோர், உடன் பிறந்தோர் வாரிசுகளாவர்
 கணவன், மனைவி, குழந்தைகள் இறந்தால், எஞ்சிய குழந்தைகள், தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர் வாரிசுகளாவர்
 குழந்தைகள் இல்லாத நிலையில், கணவன், மனைவி இருவரும் இறந்தால், அவரது பெற்றோர், உடன்பிறந்தோர் வாரிசுகளாவர்இந்த வரையறை அடிப்படையில், வாரிசு சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு எடுக்கலாம்.








      Dinamalar
      Follow us