sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ப்ளூ கிராஸ் அமைப்பை பிராணிகள் நல வாரியம் ஏற்க கோரி வழக்கு

/

ப்ளூ கிராஸ் அமைப்பை பிராணிகள் நல வாரியம் ஏற்க கோரி வழக்கு

ப்ளூ கிராஸ் அமைப்பை பிராணிகள் நல வாரியம் ஏற்க கோரி வழக்கு

ப்ளூ கிராஸ் அமைப்பை பிராணிகள் நல வாரியம் ஏற்க கோரி வழக்கு


ADDED : ஜூன் 20, 2024 01:54 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ப்ளூ கிராஸ்' அமைப்பை, பிராணிகள் நல வாரியம் ஏற்று நடத்தக் கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிராணிகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:

ப்ளூ கிராஸ் அமைப்புக்கு எதிரான புகாரில், கடந்த பிப்ரவரியில், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டது. அமைப்பில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு முறையாக உணவு அளிக்கப்படுவது இல்லை; பராமரிப்பும் முறையாக இல்லை என தெரிய வந்துள்ளது. ப்ளூ கிராசுக்கு தமிழக அரசு நிலம் வழங்கி உள்ளது.

எனவே, அதை, பிராணிகள் நலவாரியம் ஏற்று நடத்த வேண்டும். ப்ளூ கிராஸ் பெறும் நிதி விபரங்களை, தணிக்கை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக பிராணிகள் நல வாரியம், இந்திய பிராணிகள் நல வாரியம், கால்நடைத் துறை, வருமான வரித் துறை, ப்ளூ கிராஸ் அமைப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us