sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர் கேட்டு நெருக்கடி கொடுப்பதா?

/

கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர் கேட்டு நெருக்கடி கொடுப்பதா?

கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர் கேட்டு நெருக்கடி கொடுப்பதா?

கார் பந்தயம் நடத்த ஸ்பான்சர் கேட்டு நெருக்கடி கொடுப்பதா?


ADDED : ஜூலை 25, 2024 10:27 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தி.மு.க., அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி, பார்முலா கார் பந்தயத்தை நடத்திட, 'ஸ்பான்சர்ஷிப்' வழங்க, தொழில் நிறுவனங்களை வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

இரண்டு ஆண்டுகளுக்கு சென்னையில் பார்முலா கார் பந்தயத்தை நடத்த மாட்டோம் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி பத்திரம் எழுதி தந்துவிட்டு, கடந்த வாரம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர், தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்களுக்கு, பார்முலா கார் பந்தயத்தை, சென்னை மாநகரில் நடத்த 'ஸ்பான்சர்ஷிப்' வேண்டி கடிதம் எழுதி உள்ளார்.

விளையாட்டுத் துறை, அனைத்து தொழிற்சாலைகளுக்கும், கார் பந்தயம் நடத்த தேவையான நிதியை, பந்தய சாலை அபிவிருத்திக்காகவோ, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவோ, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான விளம்பரம் வழியாகவோ, ஸ்பான்சர் வழங்க கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தி.மு.க., அரசின் இந்த நிர்பந்தத்தால், பல்வேறு தொழில் அமைப்புகள் கொதிப்படைந்துள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், நுாற்பாலைகள் உள்ளிட்ட பிற தொழில்கள், கடுமையாக பாதிப்படைந்து, தொழில் துறை முடங்கி உள்ளது.

இந்நிலையில், தி.மு.க., அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி, பார்முலா கார் பந்தயத்தை நடத்திட, ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us