sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கைதாகிறார் ராஜேஷ் தாஸ்: சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தீவிரம்

/

கைதாகிறார் ராஜேஷ் தாஸ்: சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தீவிரம்

கைதாகிறார் ராஜேஷ் தாஸ்: சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தீவிரம்

கைதாகிறார் ராஜேஷ் தாஸ்: சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தீவிரம்

6


ADDED : ஏப் 27, 2024 06:09 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 06:09 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மீண்டும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியில், 2021ல், காவல் துறை சிறப்பு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த ராஜேஷ்தாஸ் மீது, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜேஷ்தாசுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.

கோரிக்கை


தண்டனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் வழக்கு தொடர்ந்தார். அதில், மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.

இரு தினங்களுக்கு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல் துறையில் உயர் பதவி வகித்ததால், தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, ராஜேஷ்தாஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட நபரும் உயர் அதிகாரி தான் என, நீதிமன்றம் கூறிவிட்டது.

'லுக் அவுட் நோட்டீஸ்'


மேலும் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து ராஜேஷ்தாஸ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உள்ளது. அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவர், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், 'தலைமறைவாக உள்ள ராஜேஷ்தாஸ் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்' என்றனர்.






      Dinamalar
      Follow us