sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கை கடற்படை வீரர்கள் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

/

இலங்கை கடற்படை வீரர்கள் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படை வீரர்கள் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படை வீரர்கள் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


ADDED : செப் 04, 2024 01:33 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டி அடித்தனர்.

செப்.,2ல் ராமேஸ்வரத்தில் இருந்து 262 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய- இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர்.

அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

பின் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்ததில் எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி பெரும்பாலான படகுகளில் தொழில் நஷ்டத்துடன் மீனவர்கள் ராமேஸ்வரம் கரை திரும்பினார்கள். இலங்கை வீரர்களின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீன்பிடிக்க செல்ல முடியாத அவலம் உள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us