ADDED : ஏப் 23, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்தன் பெயரில், 'பேஸ்புக்'கில் போலி கணக்கு துவங்கி, மர்ம நபர்கள் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனராக, ஐ.பி.எஸ்., அதிகாரி அரவிந்தன் பணிபுரிகிறார்.
அவரது பெயரில், மர்ம நபர்கள், 'பேஸ்புக்'கில் போலி கணக்கு துவங்கி, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையறிந்த அரவிந்தன், 'மர்ம நபர்களிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.

