sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., வழக்கு காலைக்குள் முடிவெடுக்க உத்தரவு

/

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., வழக்கு காலைக்குள் முடிவெடுக்க உத்தரவு

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., வழக்கு காலைக்குள் முடிவெடுக்க உத்தரவு

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., வழக்கு காலைக்குள் முடிவெடுக்க உத்தரவு


ADDED : மார் 26, 2024 11:10 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:லோக்சபா தேர்தலில், 'பம்பரம்' சின்னம் ஒதுக்கக்கோரிய ம.தி.மு.க., விண்ணப்பத்தின் மீது, இன்று காலை, 9:00 மணிக்குள் முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவில், லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தார்.

இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர்.

பம்பரம் சின்னம் பொதுவான சின்னங்கள் பட்டியலில் உள்ளதா என்பது குறித்து, தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தது.

அதன்படி, பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம் பொதுச்சின்னமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும், ம.தி.மு.க., விண்ணப்பத்தின் மீது இன்று காலை முடிவெடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்க உள்ளதால், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைக்கும்படி, ம.தி.மு.க., தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய விண்ணப்பத்தின் மீது, இன்று காலை 9:00 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளி வைத்தது.






      Dinamalar
      Follow us