sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி ஆஜராக உத்தரவு

/

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி ஆஜராக உத்தரவு

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி ஆஜராக உத்தரவு

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி ஆஜராக உத்தரவு


ADDED : ஜூலை 06, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:லோக்சபா தேர்தலின்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு, வரும் 11ம் தேதி ஆஜராகும்படி, பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6ல், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ரயிலில் இருந்த மூவரிடம் இருந்து, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது; மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக, பணம் எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது.

வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, நயினார் நாகேந்திரன், பா.ஜ., அமைப்பு செயலர் கேசவவிநாயகம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி இருந்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், எஸ்.ஆர்.சேகர் தாக்கல் செய்த மனுவில், 'ஏற்கனவே, கோவையில் என்னிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து சம்மன் அனுப்பி துன்புறுத்தக் கூடாது' என்று கூறியிருந்தார்.

மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, ''ஏற்கனவே விசாரணை நடந்த நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது,'' என்றார்.

இதையடுத்து, வரும் 11ம் தேதி ஆஜராக, எஸ்.ஆர்.சேகருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us