sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆர்.எஸ்.பாரதி மகன் மீது போலீசில் பா.ஜ., புகார்

/

ஆர்.எஸ்.பாரதி மகன் மீது போலீசில் பா.ஜ., புகார்

ஆர்.எஸ்.பாரதி மகன் மீது போலீசில் பா.ஜ., புகார்

ஆர்.எஸ்.பாரதி மகன் மீது போலீசில் பா.ஜ., புகார்


ADDED : ஆக 10, 2024 02:53 AM

Google News

ADDED : ஆக 10, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

தி.மு.க.,வைச் சேர்ந்த சாய் லட்சுமிகாந்த் பாரதி என்பவர் சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில், கொச்சையான அவதுாறு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடி தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

சாய் லட்சுமிகாந்த் பாரதி, தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதியின் மகன். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அஸ்வத்தாமன் கூறுகையில், ''தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில், அவதூறான கருத்துக்களுடன் தி.மு.க.,வினர் பதிவிடுகின்றனர். ஆதாரத்துடன் புகார் கொடுக்கிறோம்; நடவடிக்கை இல்லை. புகாரைப் பெற்றுக் கொள்ளவே போலீஸ் மறுக்கிறது. அதனால், சாய் லட்சுமிகாந்த் பாரதி விவகாரத்தில், நேரடியாகச் சென்று போலீசில் புகார் கொடுத்தேன். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின், புகாரை பெற்று ஒப்பம் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், கோர்ட்டுக்குச் செல்வேன். இதற்கிடையில், பயந்து போன சாய் லட்சுமிகாந்த் பாரதி, தன்னுடைய பதிவை நீக்கி உள்ளார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us