ADDED : ஆக 25, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில் பட்டாசு தயாரிப்பு கூடம் நேற்று மதியம் திடீரென வெடித்து சிதறியது.
அதில், அங்கு வேலை செய்த கர்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த லட்சுமணன்,45; கலியபெருமாள்,52; குமார்,37; ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு லட்சுமணன் நேற்று இரவு இறந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

