ADDED : ஜூன் 27, 2024 02:02 AM
சென்னை:சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
ஆளுங்கட்சியில் இருந்து, அது வேண்டும்; இது வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். தோழமை கட்சிகளும் இம்முறை அடக்கி வாசித்து விட்டனர்.
இப்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக, ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
இதில், 2 கோடி ரூபாயை, தங்கள் விரும்பும் திட்டங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 1 கோடி ரூபாயை, அரசு சொல்லும் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இது கையை கட்டியது போல உள்ளதாக, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். இந்த தகவலை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
இனி, 3 கோடி ரூபாயையும், எம்.எல்.ஏ.,க்கள் விரும்பும் திட்டங்களுக்கு செலவு செய்வதற்கு முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான ஜி.எஸ்.டி., கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.