sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருமா மாநாட்டுக்கு பா.ம.க., வரவேற்பு

/

திருமா மாநாட்டுக்கு பா.ம.க., வரவேற்பு

திருமா மாநாட்டுக்கு பா.ம.க., வரவேற்பு

திருமா மாநாட்டுக்கு பா.ம.க., வரவேற்பு


ADDED : செப் 12, 2024 07:19 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை. மது ஒழிப்புக்கு யார் வேண்டுமானாலும் போராடலாம். அதை நாங்கள் வரவேற்கிறோம்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

நாமக்கல்லில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. மது விற்பனை நடப்பதற்கு அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளே காரணம். மது ஒழிப்புக்கு யார் வேண்டுமானாலும் போராடலாம். அதை நாங்கள் வரவேற்கிறோம்.

மோகனுார் அருகே வளையப்பட்டியில், விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை விடுத்து, தரிசு நிலத்தில் சிப்காட் அமைக்க வேண்டும்.

தமிழகத்தில், 57 ஆண்டுகால திராவிட ஆட்சியில், 42 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், நம் சந்ததியினரின் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போகும். தரிசு நிலங்களில் தொழிற்பேட்டைகளை அமைப்பதை, பா.ம.க., வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us