ADDED : ஏப் 17, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநில தலைவர் நா.ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை:
வரும் லோக்சபா தேர்தலில் பிராமண சமூகத்தினர் அனைவரும் 100 சதவீதம் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும்.
சனாதன தர்மத்தை காக்கவும், இந்தியா வல்லரசாக உருவாகவும், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக உயர்ந்து நிற்கவும், தமிழகத்தில் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ, நாம் அனைவரும் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என, கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் ஒன்றுபட்டு ஓட்டளிக்கும் பட்சத்தில், நம் சந்ததியினரின் எதிர்காலம் சிறப்பாக அமையும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

