ADDED : மே 06, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளர் தயாநிதி 54. இவர் அக்ரஹாரம் தெருவில் மெடிக்கல் நடத்தி வரும் ஆனந்தராஜ் 49, என்பவரிடம் மெடிக்கல் ஏஜன்சி விதிமீறல்களை முடித்து தருவதற்காக ரூ. 75 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனந்தராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை ஆனந்தராஜிடம் வழங்கினர். இந்த பணத்தை தயாநிதியின் டிரைவர் மணிவண்ணன் மெடிக்கல் ஸ்டோரில் வைத்து வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் பிடித்தனர். காரில் மறைந்திருந்த தயாநிதியையும் கைது செய்தனர்.