sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஞானசேகரனிடம் திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரி கைது

/

ஞானசேகரனிடம் திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரி கைது

ஞானசேகரனிடம் திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரி கைது

ஞானசேகரனிடம் திருட்டு நகைகளை வாங்கிய வியாபாரி கைது

1


ADDED : பிப் 27, 2025 12:54 AM

Google News

ADDED : பிப் 27, 2025 12:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனிடம், திருட்டு நகைகளை வாங்கிய ஆலந்துார் நகை வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், பள்ளிக்கரணை பகுதியில் ஏழு இடங்களில் நகைகள் திருடிய வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. ஞானசேகரனை மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்தனர்.

அப்போது, ஏழு வீடுகளில், 200 சவரன் நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.

திருடிய நகைகளை, ஆலந்துார் நகை வியாபாரி குணால் என்பவரிடம் விற்று பணம் பெற்றதும் தெரிந்தது. இந்நிலையில் நேற்று, குணாலை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், அவரிடம் இருந்து, 120 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us