sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு அழைப்பு

/

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு அழைப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு அழைப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு அழைப்பு


ADDED : மே 03, 2024 09:21 PM

Google News

ADDED : மே 03, 2024 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்படி, ஏஜென்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள, திரு.வி.க., தொழிப்பேட்டையில், தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழக இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களை அளித்து, வேலைவாய்ப்புகளுக்கு உதவுகிறது. தற்போது, ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால், அத்துறை சார்ந்த இளைஞர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகுகின்றனர். அதேபோல, தனியார் ஏஜென்சிகளையும் அணுகுகின்றனர்.

அவர்களுக்கு, அயல் மொழிகளை கற்பிக்கும் வகையில் பதிவு பெற்ற ஏஜென்சிகள் எங்களுடன் இணைந்து, ஜெர்மன், ஜப்பானிய மொழிகளை கற்பித்து, உரிய தகுதிகளுடன், வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பலாம். இது, வேலை பெறுவோருக்கு அடிப்படை மற்றும் கூடுதல் தகுதியாக அமையும்.

இதில் விருப்பமுள்ள ஏஜென்சிகள், www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us