sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குற்றாலத்தில் குளிக்க நேர கட்டுப்பாட்டை தளர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

/

குற்றாலத்தில் குளிக்க நேர கட்டுப்பாட்டை தளர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றாலத்தில் குளிக்க நேர கட்டுப்பாட்டை தளர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றாலத்தில் குளிக்க நேர கட்டுப்பாட்டை தளர்த்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மார் 06, 2025 03:21 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ.,சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் இரவில் குளிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளுக்கு வருமானம் குறையும். பலர் கடைகளை ஏலத்தில் நடத்த முன்வரவில்லை. அரசுக்கு வருவாய் குறைந்துள்ளது.

பிரதான அருவி, ஐந்தருவிகளைப் போல 24 மணி நேரமும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தமிழக வனத்துறை செயலர், தென்காசி வனப்பாதுகாவலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுதாரரின் மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us