sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹிந்து முன்னணியினருக்கு எதிரான வழக்குகள் ரத்து

/

ஹிந்து முன்னணியினருக்கு எதிரான வழக்குகள் ரத்து

ஹிந்து முன்னணியினருக்கு எதிரான வழக்குகள் ரத்து

ஹிந்து முன்னணியினருக்கு எதிரான வழக்குகள் ரத்து


ADDED : ஜூலை 17, 2024 07:39 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 07:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஹிந்து மதத்தை அவதுாறாக விமர்சித்ததாக, தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை கோரி, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது பதிவான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தி.மு.க., - எம்.பி., ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து முன்னணி பிரமுகர்கள் ஆனந்தராஜ், வெங்கடேசன், ரஞ்சித்குமார் ஆகியோர் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து, பொது இடத்தை அசிங்கப்படுத்துவதை தடுக்கும் சட்டத்தின் கீழ், இவர்களுக்கு எதிராக வி.காளத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மூவரும் மனுத் தாக்கல் செய்தனர். மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது.

போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'இந்த வழக்கில், 2022 டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறைபாடுகள் உள்ளதாக, திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. அதன்பின், தாக்கல் செய்யப்படவில்லை' என்றார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர்களுக்கு எதிரான வழக்கில், அதிகபட்சம் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க முடியும். ஓராண்டுக்குள், வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்; இதுவரை எடுக்கவில்லை. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, கூறியுள்ளார். ஆனந்தராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான, இதேபோன்ற மற்றொரு வழக்கையும், நீதிபதி ரத்து செய்தார்.






      Dinamalar
      Follow us