sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல் பணிநீக்க நடவடிக்கையில் பாரபட்சம்

/

மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல் பணிநீக்க நடவடிக்கையில் பாரபட்சம்

மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல் பணிநீக்க நடவடிக்கையில் பாரபட்சம்

மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல் பணிநீக்க நடவடிக்கையில் பாரபட்சம்


ADDED : ஆக 18, 2024 12:44 AM

Google News

ADDED : ஆக 18, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மதுக்கடைகளில் அதிக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில், பாட்டிலுக்கு 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் வசூலிப்போரை பணிநீக்கம் செய்யுமாறும், 10 ரூபாய்க்கு குறைவாக வசூலிப்பவரிடம் அபராதம் வசூலிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக நடந்த சோதனையில், 28 கடைகளில், 10 - 30 ரூபாய் வரையும்; 31 கடைகளில், 10 ரூபாய்க்கு குறைவாகவும் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது.

ஒரு கடையில், 21 லட்சம் ரூபாய், மற்றொரு கடையில், 4.50 லட்சம் ரூபாய், ஒரு கடையில், 2.50 லட்சம் ரூபாய் பணம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

பணம் குறைவாக இருந்த கடைகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பத்து ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட கடைகளில், விற்பனையாளர்கள் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேபோல, 10 ரூபாய்க்கு குறைவாக விற்ற கடைகளில் விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:

ஒரு கடையில் நடக்கும் தவறுக்கு மேற்பார்வையாளர் தான் முழு பொறுப்பு. கடையில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், மாவட்ட மேலாளர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதால், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, பாரபட்சம் இல்லாமல் தவறு செய்வோர் மீது மேலாளர்கள் நடவடிக்கை எடுப்பதை, டாஸ்மாக் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us