புதிய விடியலுக்கான துவக்கம் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
புதிய விடியலுக்கான துவக்கம் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ADDED : ஜூன் 02, 2024 02:48 AM
சென்னை:'இந்தியாவின் புதிய விடியலுக்கான துவக்கமாக 4ம் தேதி அமையும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது சமூக வலைதளப் பதிவு:
பா.ஜ.,வின் 10 ஆண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட 'இண்டியா' கூட்டணி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.,வுக்கு எதிராக ஜனநாயக சக்திகளின் மாபெரும் அணித்திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.
தங்களது இடைவிடாத பரப்புரை வழியாக இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பா.ஜ., உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றி செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
ஓட்டு எண்ணிக்கையின்போது அதிகமான விழிப்புணர்வுடன் கூட்டணி செயல் வீரர்கள் இருக்க வேண்டும். ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். பாசிச பா.ஜ., வீழட்டும்; இண்டியா வெல்லட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

