sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் பால் பொருள் விற்கலாம்'

/

'திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் பால் பொருள் விற்கலாம்'

'திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் பால் பொருள் விற்கலாம்'

'திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் பால் பொருள் விற்கலாம்'


ADDED : பிப் 22, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வினியோகித்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் நெய், பால் பவுடரை தவிர பால் சார்ந்த பிற பொருட்களை உற்பத்தி செய்ய தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் சார்பில் ராஜதர்ஷினி தாக்கல் செய்த மனு:

திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்க ஒப்பந்தப்படி 2024 ல் நெய் அனுப்பினோம். எங்கள் நிறுவனம் மட்டுமன்றி வேறு சில நிறுவனங்களிடமிருந்தும் நெய் வாங்கப்பட்டது.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கிய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பினார். மக்களின் நலன் கருதி எங்கள் நிறுவனத்திற்குரிய உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக்கூறி மத்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய நியமன அதிகாரி உத்தரவிட்டார். நிறுவனத்தில் 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பல விவசாயிகள் பால் வினியோகிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம், நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கும். உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி வி.லட்சுமி நாராயணன்: நெய், பால் பவுடரை தவிர பால் சார்ந்த பிற பொருட்களை நிறுவனம் உற்பத்தி செய்ய தடையில்லை. விசாரணை மார்ச் 4க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு இடைக்கால உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us