sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கருணை பணி நியமனத்தை தாமதமாக கோர முடியாது' : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

/

'கருணை பணி நியமனத்தை தாமதமாக கோர முடியாது' : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

'கருணை பணி நியமனத்தை தாமதமாக கோர முடியாது' : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

'கருணை பணி நியமனத்தை தாமதமாக கோர முடியாது' : உயர் நீதிமன்றம் தள்ளுபடி


ADDED : ஜூன் 10, 2024 11:53 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கருணை பணி நியமனத்திற்கு நீண்ட கால தாமதத்திற்கு பின் விண்ணப்பிக்க முடியாது. மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்காததால் பணி கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். பணியில் இருந்த போது 2016 ஜன., 4ல் இறந்தார்.

இவரது மகன் சுக சோலைராஜா. தந்தை மரணத்தின் போது, இவர் மைனர். கருணை பணி நியமனம் கோரி, 2018ல் கலெக்டரிடம் விண்ணப்பித்தார். தந்தை இறந்த தேதியில் உரிய வயதை பூர்த்தி செய்யவில்லை என கலெக்டர் 2019 பிப்., 18ல் நிராகரித்தார்.

வயது பூர்த்தியான பின், 2019 செப்.,28 ல் சுக சோலைராஜா விண்ணப்பித்தார். தந்தை இறந்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கவில்லை என, 2020ல் கலெக்டர் நிராகரித்தார். இதை எதிர்த்து, சுக சோலைராஜா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

தனிநீதிபதி, 'தந்தை இறந்த மூன்று ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்துள்ளார். பணி நியமனத்தை உரிமையாக மனுதாரர் கோர முடியாது. ஏற்கனவே 5 ஆண்டுகள் காலாவதியாகி விட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து சுக சோலைராஜா மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு:

பணியின் போது இறந்தவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு கருணை பணி வழங்குகிறது.

கருணைப் பணி நியமனம் உரிமையல்ல. இத்திட்டத்தின் கீழ் நீண்ட தாமதத்திற்கு பின் விண்ணப்பிக்க முடியாது. உரிய காலத்திற்குள் மனுதாரர் விண்ணப்பிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிடத் தேவையில்லை. மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us