ADDED : மே 20, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: -விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு நேற்று வந்தனர். இவர்கள் கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பின் தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில் குவிந்தனர்.
பயணிகள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தியும், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

