ADDED : மே 24, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ''காங்., என்றைக்கும் மாறப்போவது கிடையாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
'நான் பிறந்ததில் இருந்து ஒரு சிஸ்டம் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான் இந்த சிஸ்டம்.
நீதித்துறை, கல்வித்துறை, ராணுவம் என எல்லாவற்றிலும் 90 சதவீத பேரின் பங்களிப்பே இல்லை' என காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசியுள்ளார்.
அதற்கு பதிலடியாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக தனது பாட்டி, தனது தந்தை மற்றும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சிஸ்டம் இருந்ததாக ராகுல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். என்றைக்கும் காங்கிரஸ் மாறப் போவது கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.