ADDED : மே 30, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி மற்றும் வேலுார் மற்றும் நட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி, காஞ்சிபுரம் சந்தைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கட்டு கொத்தமல்லி 40- -- 60 ரூபாய் வரை விற்று வந்தது. நேற்று ஒரு கட்டு கொத்தமல்லி 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கொத்தமல்லி, கறிவேப்பிலை விற்பனை செய்யும் கடைகளில், 10 ரூபாய்க்கு கைநிறைய கொத்தமல்லியை அள்ளிக் கொடுத்த வியாபாரிகள், தற்போது குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கு மட்டுமே தருகின்றனர்.