ADDED : ஏப் 29, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்க மாநில பொதுச்செயலர் அன்னமயில் என்பவர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக வேலை செய்த துாய்மைப் பணியாளர்களுக்கு தலா 15,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க, 2021 மே 28ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது; இதுவரை வழங்கவில்லை.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் வழங்கக் கோரி, தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா: சுகாதாரத்துறை செயலரிடம் துாய்மைப் பணியாளர்கள் தனித்தனியே மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து அவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

