sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வழிகாட்டி மதிப்பு குழுவில் மாநகராட்சி கமிஷனர்

/

வழிகாட்டி மதிப்பு குழுவில் மாநகராட்சி கமிஷனர்

வழிகாட்டி மதிப்பு குழுவில் மாநகராட்சி கமிஷனர்

வழிகாட்டி மதிப்பு குழுவில் மாநகராட்சி கமிஷனர்


ADDED : ஏப் 19, 2024 01:06 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பு துணை குழுவில், மாநகராட்சி கமிஷனர்களை சேர்க்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதற்காக, மாநில அளவில் மைய குழுவும், மாவட்ட அளவில் துணை குழுக்களும் அமைக்கப்படுகின்றன. இதில், மாவட்ட அளவிலான குழுக்களில், நகராட்சி, பேரூராட்சிகள் சார்பில், அதிகாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிகள், மாநகராட்சிகள் சார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் குறித்து பல்வேறு குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் மாவட்ட அளவிலான துணை குழுவில், ஊராட்சிகள் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரை உறுப்பினராக சேர்க்கலாம். அந்த மாவட்டத்தில் மாநகராட்சி இருந்தால், அதன் கமிஷனரை உறுப்பினராக சேர்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us