sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

800 கிராம் ஹெராயினுடன் தம்பதி அதிரடி கைது

/

800 கிராம் ஹெராயினுடன் தம்பதி அதிரடி கைது

800 கிராம் ஹெராயினுடன் தம்பதி அதிரடி கைது

800 கிராம் ஹெராயினுடன் தம்பதி அதிரடி கைது


ADDED : ஏப் 26, 2024 09:21 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தலைநகர் டில்லியில் 800 கிராம் ஹெராயினுடன் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

புதுடில்லி திலக் நகரில் வசிப்பவர் ராஜேஷ் ராணா,44. அவரது மனைவி நீலம் ராணா,43. ஏற்கனவே போதைப் பொருள் விற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நீலம் ராணாவை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், திலக் நகர் வீட்டுக்கு நேற்று முன் தினம் நீலம் ராணா வந்திருக்கும் தகவல் போலீசுக்குக் கிடைத்தது.

மேற்கு மண்டல துணைக் கமிஷனர் விசித்ர வீர் தலைமையில் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 800 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர். நீலம் மற்றும் அவரது கணவர் ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்த ஹெராயின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் எனக்கூறிய போலீசார், ராஜேஷ் மீது 23 குற்ற வழக்குகளும் அவரது மனைவி நீலம் மீது 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us