sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரத்தில் பிரம்மோற்சவம்; அறிக்கை கோரிய ஐகோர்ட்

/

ராமேஸ்வரத்தில் பிரம்மோற்சவம்; அறிக்கை கோரிய ஐகோர்ட்

ராமேஸ்வரத்தில் பிரம்மோற்சவம்; அறிக்கை கோரிய ஐகோர்ட்

ராமேஸ்வரத்தில் பிரம்மோற்சவம்; அறிக்கை கோரிய ஐகோர்ட்


ADDED : ஜூன் 11, 2024 12:00 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருச்சி ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ஆனி மாதம் ராமலிங்க பிரதிஷ்டை பிரம்மோற்சவம் ஆகம விதிப்படி, 10 நாட்கள் நடைபெற வேண்டும். இது, கோவில் தல வரலாற்றை விளக்கும் உற்சவம். கடந்த ஆண்டுகளில் ஆனியில் மூன்று நாட்கள் மட்டுமே உற்சவம் நடந்தது. தற்போது ஜூன் 10 முதல் 12 வரை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஆகமம், சம்பிரதாயத்திற்கு எதிரானது.

பிரம்மோற்சவத்தை 10 நாட்கள் நடத்தக் கோரி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணைக் கமிஷனர் ஜூன் 18ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us