sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மேற்கு வங்கம் நோக்கி நகரும் 'ரேமல்' புயல் கனமழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

/

மேற்கு வங்கம் நோக்கி நகரும் 'ரேமல்' புயல் கனமழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

மேற்கு வங்கம் நோக்கி நகரும் 'ரேமல்' புயல் கனமழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்

மேற்கு வங்கம் நோக்கி நகரும் 'ரேமல்' புயல் கனமழை குறைந்து வெப்பம் அதிகரிக்கும்


ADDED : மே 25, 2024 02:08 AM

Google News

ADDED : மே 25, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் நோக்கி நகருவதால், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கனமழை குறைந்து, வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன்கூட்டியே, தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இது மேலும் வலுவடைந்து, 'ரேமல்' புயலாக இன்று காலையில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவக்கூடும். அதன்பின், தீவிர புயலாக மாறி, நாளை நள்ளிரவில் வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டி கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ரேமல்' புயல் மேற்கு வங்கத்தை நோக்கி செல்வதால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில், கன மழைக்கான வாய்ப்பு குறையும் என, தெரிய வந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்


தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், இன்று பகல் நேர வெப்பநிலை இயல்பை ஒட்டி காணப்படும். நாளை முதல் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த, இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். பகல் நேர வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் அளவில் பதிவாகும்.

சூறாவளி


குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு, மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று மாலை வரை, மணிக்கு 90 முதல் 120 மற்றும் 135 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us