ADDED : ஜூலை 31, 2024 06:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிம்மதி வேண்டுமா... கரூர் மாவட்டம் நெரூர் பத்ரகாளியம்மனை தரிசியுங்கள். காவிரி கரையில் அமைந்த இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. கருவறையில் காளியம்மன் ஒன்பது வடிவங்களில் இருக்கிறாள்.
உடல்நலம் இல்லாதவர்கள் இங்கு அதிகம் வருகின்றனர். குடும்பம், சொத்து, உறவினர்களுடன் ஏற்படும் பிரச்னையைப் போக்க பொங்கல், விளக்கு ஏற்றுகின்றனர். தீயசக்தியை போக்கும் கோயில் இது. கருவறைக்கு எதிரில் பிரம்மாண்டமான குதிரை உள்ளது. மண்டபத்தின் நுழைவு வாயிலில் துவார பாலகர், சந்தான கருப்பசாமி சன்னதி உள்ளன.
எப்படி செல்வது
கரூரில் இருந்து 11 கி.மீ.,
நேரம்: காலை 9:00 - 12:00 மணி
தொடர்புக்கு
93605 10107