sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் பொருட்கள் இருப்பு குறைவு அபராத தொகை உயர்த்தி உத்தரவு

/

ரேஷன் பொருட்கள் இருப்பு குறைவு அபராத தொகை உயர்த்தி உத்தரவு

ரேஷன் பொருட்கள் இருப்பு குறைவு அபராத தொகை உயர்த்தி உத்தரவு

ரேஷன் பொருட்கள் இருப்பு குறைவு அபராத தொகை உயர்த்தி உத்தரவு


ADDED : மே 04, 2024 12:16 AM

Google News

ADDED : மே 04, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரேஷன் கடைகளில் உணவு பொருட்களின் இருப்பு குறைவாக இருந்தால், ஊழியருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தி, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. இதற்காக, தமிழக அரசு ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது.

சில கடை ஊழியர்கள், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை விற்றது போல், விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்கின்றனர். அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்போது, பொருட்களின் இருப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுகிது.

அதன்படி, தலா ஒரு கிலோ அரிசிக்கு, 25 ரூபாய்; சர்க்கரைக்கு, 50 ரூபாய்; கோதுமைக்கு, 25 ரூபாய்; துவரம் பருப்புக்கு, 75 ரூபாய்; லிட்டர் பாமாயிலுக்கு, 75 ரூபாய்; லிட்டர் மண்ணெண்ணெய்க்கு, 50 ரூபாய் என, அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த அபராத தொகை, 2014ல் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப, இருப்பு குறையும் பொருட்களுக்கான அபராத தொகையை உயர்த்தி, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பதிவேட்டில் உள்ள அளவை விட, அதிகளவில் இருப்பு இருந்தாலும், இதே அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், அரசுக்கு ஏற்படும் இழப்பை அபராதம் வசூலித்து சரிகட்டுவதுடன், ஊழியர் மீது தனியே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை வழங்குமாறும், உணவு துறை தெரிவித்துள்ளது.

புதிய அபராத தொகை

----------------------

பொருள் கிலோ/ லிட்டர் - அபராதம் ரூபாயில்

அரிசி - 45

சர்க்கரை - 50

கோதுமை - 45

துவரம் பருப்பு - 110

பாமாயில் - 130

மண்ணெண்ணெய் - 50






      Dinamalar
      Follow us