sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் நிரந்தர பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற கோரிக்கை

/

கோவில் நிரந்தர பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற கோரிக்கை

கோவில் நிரந்தர பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற கோரிக்கை

கோவில் நிரந்தர பணியாளர்களை அரசு ஊழியராக மாற்ற கோரிக்கை


ADDED : மார் 02, 2025 01:07 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவில் நிரந்தர பணியாளர்களை, அரசு ஊழியர்களாக மாற்ற, அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் சங்க மாநில தலைவர் குமார், காப்பாளர் கண்ணன், பொதுச்செயலர் ரமேஷ், பொருளாளர் சேட்டு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் சமீபத்தில் அளித்த மனு:

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 10,000க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளனர்.

முதற்கட்டமாக, நிரந்தர பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக மாற்றி அவர்களுக்கு வழங்கப்படும் இதர படி மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும், தற்காலிக, தொகுப்பூதிய பணியாளர்களை, பணி வரன்முறை செய்ய வேண்டும்.

கோவிலில் தற்காலிக, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவதை போன்று மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

செயல் அலுவலர் நிலை - 4 காலி பணியிடங்களில், 25 சதவீதம் திருக்கோவில் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்தல் உட்பட, 16 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

- - நமது நிருபர் -






      Dinamalar
      Follow us