sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.ஐ., விசாரணை கோருவது பேஷனாகி விட்டது: துரைமுருகன்

/

சி.பி.ஐ., விசாரணை கோருவது பேஷனாகி விட்டது: துரைமுருகன்

சி.பி.ஐ., விசாரணை கோருவது பேஷனாகி விட்டது: துரைமுருகன்

சி.பி.ஐ., விசாரணை கோருவது பேஷனாகி விட்டது: துரைமுருகன்


ADDED : ஜூலை 11, 2024 10:21 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார்:''எல்லாவற்றிற்கும், சி.பி.ஐ., விசாரணை கோருவது, ஒரு பேஷனாக மாறிவிட்டது,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில், 3 அணைகளில் தண்ணீர் முழுவதும் நிரம்பினால் அவர்கள் திறந்து விட்டுதான் ஆக வேண்டும். எல்லா அணையும் கர்நாடகாவில் நிரம்பப்போகிறது. அதனால், தமிழகத்திற்கு தண்ணீர் வரும். சென்னையை சுற்றி புதியதாக, 7 நீர் நிலைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக நீர் சேமிக்கப்படும்.

எது நடந்தாலும், சி.பி.ஐ., விசாரணை கேட்கின்றனர். கள்ளச்சாராயம் சாவு, ஆம்ஸ்ட்ராங் கொலை என எல்லாவற்றுக்கும் கேட்கிறார்கள். இப்படி கேட்பது இப்போது பேஷனாகி விட்டது. எல்லா நாட்களிலும், எல்லா ஆட்சியிலும் கொலை நடந்து கொண்டு தான் இருக்கிறது. முன்விரோதம் காரணமாகவே அதிக கொலைகள் நடக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை சட்டம் போட்டு தடுக்கிறோம். ஆனால், திட்டம் போட்டு நடத்துகின்றனர். என்ன செய்வது?

இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்ந்து, 'அ.தி.மு.க.,வில் ஆக., 15 ம் தேதிக்குள், பன்னீர்செல்வத்தையும்; சசிகலாவையும் சேர்க்க வேண்டுமென, பா.ஜ., மிரட்டுவதாக கூறப்படுகிறதே' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், ''அது வெளிநாட்டு செய்தி, அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது,'' என்றார்.






      Dinamalar
      Follow us