ADDED : ஏப் 28, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : பள்ளி கோடை விடுமுறையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலிலும், பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினார்.
கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். ராமேஸ்வரம் கோயில் சன்னதி தெரு, மேலவாசல், திட்டக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

