திறமையிருந்தால் மண் அள்ளுங்கள்: தி.மு.க., பகிரங்கம்
திறமையிருந்தால் மண் அள்ளுங்கள்: தி.மு.க., பகிரங்கம்
ADDED : செப் 04, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் நேற்று தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, அரசு அதிகாரிகள் தி.மு.க., மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தோழர்களாக தான் இருப்பர். சிலர் வாகனங்களில் மண் அள்ளிச் செல்கின்றனர்.
உங்களுக்கு திறமை இருந்தால், நீங்களும் மண் அள்ளிச் செல்லுங்கள். ஆனால், மாட்டிக் கொண்டால், கட்சி காப்பாற்றவில்லை என புலம்பக் கூடாது. மற்றபடி, கட்சியினருக்கு எதையும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.