sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை

/

திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை

திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை

திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகர் வெட்டிக்கொலை


ADDED : மே 23, 2024 10:13 PM

Google News

ADDED : மே 23, 2024 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்;திண்டுக்கல்லில் தி.மு.க., பிரமுகரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். முன் விரோதத்தில் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த (தி.மு.க.,) பிரமுகர் மாயாண்டி ஜோசப் 60. இவரது மனைவி நிர்மலா,முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக ( தி.மு.க.,) இருந்தார். இவர் உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்துகிறார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் 2 குழந்தைகளும் வெளியூரில் படிக்கின்றனர். இந்நிலையில் மாயாண்டி ஜோசப், மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசிக்கிறார். இரவு 8:00 மணிக்கு மாயாண்டி ஜோசப், யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து டூவீலரில் வேடப்பட்டிக்கு வந்தார். அப்போது இவர் வருகைக்காக முன்னரே காத்திருந்த மர்ம கும்பல் எதிர் திசையில் டூவீலரில் வந்து மாயாண்டி ஜோசப், மீது மோதினர். நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பியது. தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என விசாரிக்கின்றனர். மாயாண்டி ஜோசப் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us