sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாக்காளர்கள் பெயர் திடீர் நீக்கம் தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., மனு

/

வாக்காளர்கள் பெயர் திடீர் நீக்கம் தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., மனு

வாக்காளர்கள் பெயர் திடீர் நீக்கம் தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., மனு

வாக்காளர்கள் பெயர் திடீர் நீக்கம் தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., மனு


ADDED : செப் 04, 2024 09:43 PM

Google News

ADDED : செப் 04, 2024 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'வாக்காளர்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல், வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்களை, தேர்தல் ஆணையம் தன்னிச்சயைாக நீக்கியுள்ளது' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுக்கு, தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள மனு:

வாக்காளர் பட்டியலில் இருந்து, ஆயிரக்கணக்கான பெயர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டிருப்பது, எங்கள் கவனத்திற்கு வந்தது. வாக்காளர்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கம் செய்துள்ளது.

இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க, பதிவு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிகாரிகள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாமல், மோசடித்தனத்துடன் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுத்துகிறது.

வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்தும், அதே முகவரியில் பல ஆண்டுகளாக வசித்தும், கடந்த தேர்தல்களில் ஓட்டு அளித்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முறையான தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us