sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விதை போட்டது நாங்கள் பழனிசாமிக்கு தி.மு.க., பதில்

/

விதை போட்டது நாங்கள் பழனிசாமிக்கு தி.மு.க., பதில்

விதை போட்டது நாங்கள் பழனிசாமிக்கு தி.மு.க., பதில்

விதை போட்டது நாங்கள் பழனிசாமிக்கு தி.மு.க., பதில்


ADDED : ஆக 03, 2024 11:30 PM

Google News

ADDED : ஆக 03, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்கு விதை போட்டு வளர்த்தது தி.மு.க., தான்' என, அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க., துணைப் பொதுச் செயலர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கூறியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அருந்ததியர் சமூகத்தினர் மீது அ.தி.மு.க.,வுக்கு ஏன் திடீர் பாசம்? அந்த சமூகத்திற்கு தி.மு.க., அரசு உள்ஒதுக்கீடு வழங்கிய நேரத்தில், ஜெயலலிதா ஏன் எதிர்த்தார் என்ற வரலாற்றை, அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 2008 நவ., 29ம் தேதி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தொடர்பாக, முடிவு எடுக்கும் அதிகாரம், மத்திய அரசுக்கு மட்டும் தான் இருக்கிறது. மத்திய ஆட்சி முடிவு பெறும் நிலையில், அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அருந்ததியின மக்களை ஏமாற்றும் செயல' என, குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கருணாநிதி அரசு அந்த சமூகத்திற்கு உள்ஒதுக்கீடு வழங்கியது. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு, உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி, ஜெயலலிதா பொய்யை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்ட பழனிசாமி, தமிழக அரசு 2009ம் ஆண்டு அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது என்று கூறியுள்ளார். அது, தி.மு.க., அரசு என சொல்ல என்ன தயக்கம்?

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டிற்கு, தி.மு.க., அரசு விதை போட்டது. அது வளர்ந்து பழமாகும் வரை எதிர்த்து விட்டு, அந்த பழம் அருந்ததியினர் சமூகத்தின் கையில் கிடைக்கப் போவது தெரிந்ததும், பழனிசாமி சொந்தம் கொண்டாட வந்து விட்டார்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us