sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்

/

கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்

கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்

கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அலைக்கழிக்கும் தி.மு.க. ஒன்றிய செயலாளர்

18


UPDATED : பிப் 22, 2025 06:49 AM

ADDED : பிப் 22, 2025 05:51 AM

Google News

UPDATED : பிப் 22, 2025 06:49 AM ADDED : பிப் 22, 2025 05:51 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி நெல் கொள்முதல் மையத்தில் கமிஷனுக்காக மூடைகளை எடைபோட விடாமல் அப்பகுதி தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஒருவர் ஐந்து நாட்கள் அலைக்கழித்ததாக ம.தி.மு.க., ஒன்றிய செயலாளரும் விவசாயியுமான மணவாளக்கண்ணன் கண்ணீருடன் கலெக்டர் சங்கீதாவிடம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் அளித்தார்.

பேச முடியாமல் தேம்பி அழுததால் சக விவசாயிகள் தண்ணீர் கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: செல்லம்பட்டியில் 'அவர்' (சுதாகரன்) தி.மு.க., ஒன்றிய செயலாளர். அங்கு எல்லா நிர்வாகிகளுக்கும் காசு கொடுத்தால் தான் நெல் மூடைகளை நெல் கொள்முதல் மையத்தில் எடைபோட அனுமதிக்க முடியும் என கட்டாயப்படுத்துகிறார். எனது நெல் மூடைகளை 5 நாட்கள் எடைபோடாமல் நிறுத்தி வைத்து என்னை அலைக்கழித்தார்.

விவசாயிகள் நெல் பயிரிட முடியாமல் பரிதவிக்கிறோம். 40 கிலோ மூடைக்கு ரூ.70 கமிஷன் கேட்கின்றனர். மாநில அரசு சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூடைக்கு ரூ.10 தருகிறது.

அதுபோக விவசாயிகளும் ஒரு மூடைக்கு ரூ.25, அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு ரூ.25, உள்ளூர் பிரமுகர்களுக்கு ரூ.20 கொடுத்தால் நெல் கொள்முதல் மையமே செயல்படும். இல்லாவிட்டால் மையத்தை நடத்தவிட மாட்டார்.

மூன்றாண்டுகளாக இப்படித்தான் இருந்தது என்றாலும் இந்த முறை எல்லை தாண்டி செயல்படுகின்றனர். எல்லோரின் ஆதரவுடன் தான் கமிஷன் வசூலிக்கின்றனர். யாரிடமும் பேசி ஒரு பயனும் இல்லை. நேற்று 17 மையங்கள் திறந்துள்ளனர்.

செல்லம்பட்டி பகுதியில் 95 சதவீத அளவுக்கு நெல் அறுவடை முடிந்து விட்டது. ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக 17 மையங்களை எதற்காக திறக்க வேண்டும். இப்போது மையத்தை திறந்தால் வெளியூர் வியாபாரிகள் தான் நெல்லை விற்று லாபம் பார்ப்பார்கள்.

விவசாயிகளுக்கு இங்கே வேலையில்லை, வியாபாரிகளுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். செல்லம்பட்டியில் 5 சதவீத நெல் கூட அறுவடைக்கு இல்லை. இன்னும் 50 மையங்கள் செயல்படுகிறது. கலெக்டர் சங்கீதாவிடமும் தெரிவித்தேன். யாரிடமும் சொன்னாலும் நெல்லை எடை போட விடமாட்டேன் என்றார் தி.மு.க., ஒன்றிய செயலாளர். அவருக்கு பணம் கொடுத்த பின் (இன்னொருவர் மூலம்) தான் எடை போட அனுமதித்தனர். விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.65 முதல் ரூ.80 வரை வசூலிக்கின்றனர்.

எங்கள் தலைமையிடம் (ம.தி.மு.க.,) தெரிவித்துவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது.

இவ்வாறு பேசினார்.

கலெக்டர் சங்கீதாவிடம் ஆதங்கத்தை தெரிவித்த போது தேம்பி அழுத மணவாளக்கண்ணன், வெளியே வந்து அழுது கொண்டே இருந்தார். பத்திரிகையாளர்கள் சமாதானப்படுத்திய போது, உள்ளே பேசியதையே மீண்டும் பேட்டியாக தேம்பிக் கொண்டே கூறினார்.

வீண் பழி சுமத்துகிறார்

தி.மு.க., செல்லம்பட்டி (வடக்கு) ஒன்றிய செயலாளர் சுதாகரன் கூறியதாவது: 2019 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க., போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அப்போது ம.தி.மு.க., ஒன்றிய செயலாளரான மணவாளக்கண்ணன் அக்கட்சி கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் ஓட்டை பிரித்ததால் தி.மு.க., கவுன்சிலர் தோல்லியுற்றார். அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அந்த வெற்றியால் யூனியன் சேர்மன் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. அப்போது முதல் எது நடந்தாலும் எங்கள் (தி.மு.க.,) மீது குற்றம் சொல்லிக்கொண்டு திரிகிறார். அவரது செயல்பாடுகள் குறித்து ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதனிடமும் தெரிவித்துவிட்டோம். இதன் தொடர்ச்சியாக தான் கலெக்டர் முன்னிலையில் என்னை குற்றம்சாட்டியுள்ளார். அதில் உண்மையில்லை. நெல் கொள்முதல் மைய விஷயங்களில் நான் தலையிடவில்லை. நான் அவரை அடிக்க வந்ததாக தெரிவித்துள்ளது என் மீது வீண் பழி சுமத்தும் வகையில் முன் விரோதத்தில் கூறியுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us