sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வினர் ஓட்டுக்கு ரூ. 6,000 விநியோகம் சில ஊர்களில் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டல் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி குற்றச்சாட்டு.

/

தி.மு.க.,வினர் ஓட்டுக்கு ரூ. 6,000 விநியோகம் சில ஊர்களில் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டல் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி குற்றச்சாட்டு.

தி.மு.க.,வினர் ஓட்டுக்கு ரூ. 6,000 விநியோகம் சில ஊர்களில் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டல் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி குற்றச்சாட்டு.

தி.மு.க.,வினர் ஓட்டுக்கு ரூ. 6,000 விநியோகம் சில ஊர்களில் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டல் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி குற்றச்சாட்டு.


ADDED : ஜூலை 10, 2024 10:13 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:'விக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவு நாளிலும், தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தனர்' என, பா.ம.க., வேட்பாளர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ம.க., வேட்பாளர் அன்புமணி, காலை 7:30 மணிக்கு தனது சொந்த ஊரான விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஓட்டுச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டளித்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விராட்டிகுப்பம் கே.வி.ஆர்., நகரில் தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு தலா ரூ. 6000 வழங்கியுள்ளனர். இதே போல தொகுதி முழுவதும் ரொக்கப்பணம், பரிசு பொருட்கள் கொடுத்துள்ளனர்.

வி.சாத்தனுாரில் பரிசு பொருட்களையும், ஆசாரங்குப்பத்தில் வேட்டி சேலைகளையும் பா.ஜ., பா.ம.க.,வினர் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.

மக்கள் தெளிவாக பா.ம.க.,விற்கு ஓட்டளித்துள்ளனர். பா.ம.க.,விற்கு ஆதரவாக ஓட்டளித்த இடங்களில் தி.மு.க.,வினர் நேரில் சென்று, கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டி வருகின்றனர். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. பா.ம.க., அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., வேட்பாளர் சிவா, விழுப்புரம் அருகே உள்ள தனது சொந்த ஊரான, அன்னியூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், காலை 7:00 மணிக்கு குடும்பத்துடன் சென்று ஒட்டளித்தார்.

பின் அவர் கூறுகையில், 'தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். எனவே, இந்த தேர்தலில் தி.மு.க., மகத்தான வெற்றியை பெறும்' என்றார்.






      Dinamalar
      Follow us