sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் முதல்முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு

/

தமிழகத்தில் முதல்முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் முதல்முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் முதல்முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு


ADDED : ஏப் 21, 2024 12:39 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:தமிழகத்தில் முதல் முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

தமிழகத்தில், மாநில விலங்கான வரையாடுகள், அரிய வகை வனவிலங்குகள் பட்டியலில் அட்டவணை-1ல் இடம் பெற்றுள்ளது. அழிந்து வரும் வரையாடுகளை காக்கும் வகையில், தமிழக அரசு, வரையாடுகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்தாண்டு, அக்., 23ல் திட்டம் துவக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் முதன் முறையாக, ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி, வரும், 29 முதல் மே 1ம் தேதி வரை நடக்கிறது.

இந்த கணக்கெடுப்பு பணி, நீலகிரி, முக்குருத்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வனஉயிரின சரணாலயம் வரையிலான, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வரையாடுகளின், 140 வாழ்விடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் வால்பாறை வனச்சரகத்தில் புல்மலை சுற்றுகளை ஒட்டிய கேரள வனப்பகுதிகளிலும், வரையாடுகள் அதிகளவு காணப்படுவதால், இப்பகுதியில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us