sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஐ.டி., ரெய்டு' பயம் காட்டி பணம் கேட்ட டிரைவர் கைது

/

'ஐ.டி., ரெய்டு' பயம் காட்டி பணம் கேட்ட டிரைவர் கைது

'ஐ.டி., ரெய்டு' பயம் காட்டி பணம் கேட்ட டிரைவர் கைது

'ஐ.டி., ரெய்டு' பயம் காட்டி பணம் கேட்ட டிரைவர் கைது

1


ADDED : ஜூலை 05, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:திண்டுக்கல்லை சேர்ந்தவர் விக்னேஷ்குமார், 40. லோக்சபா தேர்தலின் போது, மதுரை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, 'ஆக்டிங்' டிரைவராக இருந்தார். தேர்தலுக்கு பின், மதுரை நகரியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

வருமானவரித்துறை அதிகாரிகளுடன் பழகியதை பயன்படுத்தி, மதுரை, திண்டுக்கல், தேனியில் உள்ள பிரபல தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, 'எனக்கு பணம் கொடுத்தால் 'ரெய்டு' வராமல் பார்த்துக் கொள்கிறேன்' என, மிரட்டி வந்துள்ளார்.

மதுரையிலும் பிரபல நகைக்கடை உரிமையாளர்கள், தேனி தனியார் மருத்துவமனை, பேக்கரி, ஹோட்டல் உரிமையாளர்களிடமும், 'டீலிங்' பேசியுள்ளார். சந்தேகப்பட்ட உரிமையாளர் ஒருவர், வருமானவரித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தபோது தான் விக்னேஷ்குமார் மிரட்டுவது தெரிந்தது.

தொடர்ந்து, அவரை மதுரை கீழவாசலில் உள்ள ஒரு நகைக்கடைக்கு அதிகாரிகள் வரவழைத்தனர். அங்கு வந்த விக்னேஷ்குமார் அதிகாரிகளிடம் சிக்கினார்.

அவரை வருமான வரித்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி இயக்குனர் புஷ்பராஜ் புகாரில், விளக்குத்துாண் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us