sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொறியாளர், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் ஸ்ரீதர் வேம்பு கருத்து

/

பொறியாளர், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் ஸ்ரீதர் வேம்பு கருத்து

பொறியாளர், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் ஸ்ரீதர் வேம்பு கருத்து

பொறியாளர், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் ஸ்ரீதர் வேம்பு கருத்து

2


ADDED : பிப் 27, 2025 02:32 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:32 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழக பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம்' என, தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'ஜோஹோ' தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, 'எக்ஸ்' தளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு:

இந்தியாவில், ஜோஹோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பொறியாளர்கள், மும்பை, டில்லியில் உள்ள ஜோஹோ வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகின்றனர். எங்கள் வணிகத்தின் பெரும் பகுதி மும்பை, டில்லி நகரங்கள் மற்றும் குஜராத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வாடிக்கையாளர்களுடனான வணிகம், நாங்கள் மேற்கொள்ளும் சிறப்பான சேவையை பொறுத்தே அமைகிறது. எனவே, ஹிந்தி தெரியாமல் இருப்பது பெரும்பாலும் தமிழக மக்களுக்கு ஒரு பெரிய குறைபாடு.

ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம். நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் இடைவிடாமல் ஹிந்தி படிக்க கற்றுக் கொண்டேன், இப்போது ஹிந்தியில் பேசுவதை என்னால், 20 சதவீதம் புரிந்து கொள்ள முடிகிறது.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். எனவே, அரசியலை புறக்கணித்து விட்டு ஹிந்தி கற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us