sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்வு அட்டவணை மாற்றம் தள்ளிப்போகிறது விடுமுறை

/

தேர்வு அட்டவணை மாற்றம் தள்ளிப்போகிறது விடுமுறை

தேர்வு அட்டவணை மாற்றம் தள்ளிப்போகிறது விடுமுறை

தேர்வு அட்டவணை மாற்றம் தள்ளிப்போகிறது விடுமுறை


ADDED : மார் 30, 2024 01:24 AM

Google News

ADDED : மார் 30, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 11 நாட்கள் தள்ளிப்போகிறது.

தமிழக அரசு பாடத்திட்டத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் வரும் 2ம் தேதி துவங்கி 12ம் தேதி முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரம்ஜான் பண்டிகை, 10ம் வகுப்பு தேர்வு, தெலுங்கு, தமிழ் புத்தாண்டு விடுமுறை, தேர்தல் என பல்வேறு காரணங்களால் இரு தேர்வுகள் மாற்றப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.10ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் பாடத்தேர்வு ஏப்.22ல் நடக்கும்

 ஏப்.12ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு ஏப்.23ல் நடத்தப்படும். இதன்படி தேர்வுகளை நடத்த முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பழைய அட்டவணைப்படி ஏப்.13 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று கூறப்பட்டிருந்தது. தேர்வு அட்டவணை மாற்றத்தால் கோடை விடுமுறை ஏப்.13ல் துவங்குவதற்கு பதில் ஏப்.24ம் தேதியில் துவங்க உள்ளது.






      Dinamalar
      Follow us