sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்குவரத்து விதி மீறிய பெண் போலீசுக்கு அபராதம்

/

போக்குவரத்து விதி மீறிய பெண் போலீசுக்கு அபராதம்

போக்குவரத்து விதி மீறிய பெண் போலீசுக்கு அபராதம்

போக்குவரத்து விதி மீறிய பெண் போலீசுக்கு அபராதம்


ADDED : ஜூன் 04, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில், டூ - வீலரில் சென்ற பெண் போலீஸ் ஒருவர், ெஹல்மெட் அணியாமல், மொபைல் போனில் பேசிக் கொண்டே சென்றார். அதை, ஒருவர், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்ததோடு, 'வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார், விதிமுறைகளை மீறலாமா' என்று கேட்டார்.

இந்த தகவலை அறிந்த திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள், டூ - வீலரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் செல்வராணி என்ற போலீஸ்காரர் தான் என்பது தெரிந்தது. மேலும், போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்காத அவருக்கு, போலீஸ் அதிகாரிகள், 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us